இலங்கை அணியை பந்தாடியது மேற்கிந்திய தீவுகள் அணி !

11.03.2021 09:20:35

 

இலங்கை அணிக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

ஆண்டிகுவா மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 49ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தனுஷ்க குணதிலக்க 55 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும் அஷேன் பண்டார 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் மற்றும் ஜேஸன் மொஹமத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அல்சார்ரி ஜோசப், கிய்ரன் பொலார்ட் மற்றும் பெபியன் அலென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 233 என்ற வெற்றி இலங்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 47 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷாய் ஹோப் 110 ஓட்டங்களையும் எவீன் லீவிஸ் 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 133 பந்துகளில் 1 சிக்ஸர் 12 பவுண்ரிகள் அடங்களாக 110 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஷாய் ஹோப் தெரிவுசெய்யப்பட்டார்.