கிளிநொச்சியில் கராத்தே கண்காட்சி

02.05.2024 14:53:55

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலை முதல்வர் இளவேந்தி தலைமையில் இடம்பெற்ற இப் போட்டி நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் T.முகுத்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை  பாடசாலை மாணவர்களால் நடத்தப்பட்ட கராத்தே கண்காட்சியும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.