வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இளம் தம்பதி கைது

10.08.2022 10:02:29

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளம் தம்பதிகள் கைது

வெளிநாடு ஒன்றிலிருந்து இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இளம் தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய தம்பதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் இன்று (9) பிற்பகல் 02.30 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து ஓமான் எயார் நிறுவனத்தின் WY-373 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நகைகள் கடத்தல்

இவர்கள் இருவரும் சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்கு இடையில் இந்த நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.