பயங்கரவாதிகள் 11 பேருக்கு மரண தண்டனை!

26.04.2024 00:33:14

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நசிரியா மத்திய சிறைச்சாலையில் நேற்று முன்தினம் குறித்த 11 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்மை ஈராக் இராணும் கடந்த 2017 ஆம் ஆண்டு தோற்கடித்தது.

இதன்போது ஏராளமான ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது