கொரோனா வைரஸ் தொற்றினால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஜேர்மனி

09.01.2021 07:12:13

 

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக 40ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 40ஆயிரத்து 401பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை 18இலட்சத்து 95ஆயிரத்து 139பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 25ஆயிரத்து 811பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆயிரத்து 143பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 60ஆயிரத்து 638பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 569பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14இலட்சத்து 94ஆயிரத்து 100பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.