சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு

13.03.2024 08:23:45

திருவனந்தபுரம்: மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழாவிற்காக மார்ச் 16-ம் தேதி கொடியேற்றமும், 25-ம் தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது. பக்தர்கள் sabarimala.org.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.