லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம்.

12.06.2025 07:46:18

லாஸ் ஏஞ்சல்ஸை உலுக்கிய குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் புதன்கிழமை (11) ஆறாவது நாளை எட்டின.

இருப்பினும் நகரம் முழுவதும் அமைதியின்மை நிலவுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆஸ்டின், டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், டல்லாஸ் மற்றும் டென்வர் உள்ளிட்ட பல அமெரிக்க நகரங்களுக்கும் ஆர்ப்பாட்டங்கள் பரவியதால், புதன்கிழமை காலை லாஸ் ஏஞ்சல்ஸில் நீக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.

 

வார இறுதியில் மேலும் போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

சனிக்கிழமை (14) பல ஆர்வலர் குழுக்கள் இதில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நாள் அமெரிக்க இராணுவத்தின் 250 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 79 ஆவது பிறந்தநாளுடன் ஒத்துப்போகிறது.

சனிக்கிழமை முதல் அதிகாரிகள் இதுவரை 400 பேரை கைது செய்துள்ளனர் அல்லது தடுத்து வைத்துள்ளனர்.

இதில் 330 ஆவணமற்ற குடியேறிகளும் அடங்குவர்.

 

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில், காவல்துறை அதிகாரிகள் மீது மோலோடோவ் காக்டெய்ல்களை வீசியதாக இதுவரை இரண்டு ஆண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்டத்தரணி பில் எஸ்ஸேலி தெரிவித்தார்.

போராட்டங்களை அடக்குவதற்காக ட்ரம்பின் நிர்வாகத்தால் 700 கடற்படையினர் உட்பட ஆயிரக்கணக்கான படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யும் வரை மக்களைத் தடுத்து வைக்கும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.