அயர்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஐந்தாயிரம் பேர் உயிரிழப்பு !
02.07.2021 09:54:06
அயர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்தாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 68ஆவது நாடாக விளங்கும் அயர்லாந்தில் இதுவரை இரண்டு இலட்சத்து 72ஆயிரத்து 784பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 448பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பத்தாயிரத்து 454பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 14பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 57ஆயிரத்து 330பேர் பூரண குணமடைந்துள்ளனர்.