வடகொரியா ஏவுகணை சோதனை!

01.07.2024 07:46:58

தென்கொரியா, அமெரிக்கா ,ஜப்பான் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி நிறைவடைந்த நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது

 

வடகொரியாவின் ஜங்யாங் நகரில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி 10 நிமிட இடைவெளியில் 2 ஏவுகணைகள் ஏவப்பட்டதுடன் முதல் ஏவுகணை கடலில் விழந்ததாகவும், இரண்டாவது ஏவுகணை வடகொரிய நிலப்பரப்பிற்குள்ளேயே விழுந்ததாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் வடகொரியா கடந்த 26ம் தேதி ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் 10 நாட்களுக்குள் 2வது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் கொரீய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது