வவுனியாவில் அனுரகுமார

17.03.2024 08:07:31

தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதியை  சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருப்பார்கள் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க வவுனியாவில் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதபோக்கற்ற இனவாதமற்ற மிதவாத தலைவர்களுடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடக்கை சேர்ந்தவர்களும் இடம்பெறவேண்டும் தீவிரவாதபோக்கற்ற இனவாதமற்ற மிதவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயார் அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒருபகுதியாகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொழி பற்றும் காணி பிரச்சினைகளிற்கு தேசிய மக்கள் சக்தி தீர்வை காணும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்ய அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொழிப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என உறுதிமொழி வழங்குகின்றோம்,உங்கள் மொழியில் கருமங்களை ஆற்றுவதற்கான உரிமையை உறுதி செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.