உரப் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விவாதம்

21.10.2021 06:31:38

உரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து இன்று (21) நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்தப் பிரேரணை எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட உள்ளது.

இன்றும், நாளையும் நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திற்கு முற்பகல் 10 மணி முதல் 11 மணிவரை ஒரு மணிநேர காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இளம் குற்றவாளிகள் தொடர்பான திருத்தச்சட்டமூலம் இன்று (21) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இதன் மூலம், முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்த 18க்கும் குறைந்த வயதெல்லையானது, 18 முதல் 22 வயதுவரை என திருத்தப்படவுள்ளது.