துப்பாக்கி சுடும் மையங்களில் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்: ஓபிஎஸ் அறிக்கை
28.01.2022 08:10:34
தமிழகத்தில் துப்பாக்கி சுடும் மையங்களில் போதிய பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை என்றால் அங்கு பயிற்சி மேற்கொள்வதை ரத்து செய்ய வேண்டும் என கூறினார். பெரம்பலூர் விவசாயி சுப்பிரமணி வீட்டின் மேற்கூரையில் குண்டு பாய்ந்த நிகழ்வை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் அறிக்கை செய்தார்.