இலங்கையின் நீதிக்கான ஜெனீவாவில் நம்பிக்கைகள் மறைந்து போகின்றன.
காணாமல்போனவர்களின் குடும்பங்கள் சிறியவீதியோரங்களில் அமர்ந்திருக்கின்றன அல்லது இலங்கையின் அழிவடைந்த வடக்கின் கிராமங்களில் தகவல்கள் அல்லது கருத்துக்களை திரட்டுகின்றன. , அவர்கள் நாட்டின் கொடூரமான உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன பல்லாயிரக்கணக்கானோரின் புகைப்படங்களை அணைத்துக்கொள்கின்றன ர்.ஒவ்வொரு இடத்திலும், பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் அதிகாரிகளிடம் ஒரு கேள்வியைமட்டுமே கேட்கிறார்கள்: எங்கள் பிள்ளைகள் எங்கே?
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்ப்பாட்டங்கள் தடையின்றி தொடர்கின்றன,
போரின் மனித இழப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கு ஒரு அரசாங்கத்தால் அனுமதிக்கப்படுகிறது.ஏற்கனவேவிரக்தியுற்றிருந்தநிலையில் இப்போது ஆர்ப்பாட்டங்கள் நம்பிக்கையற்றவகையாகத் தெரிகிறது. இலங்கையில் ஒரு புதிய அரசாங்கம் உள்ளது, அது நினைவுகூர்வதை க் கூட எதிர்ப்பின் செயலாக மாற்றிவிட்டது.கோத்தாபய ராஜபக்ச 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து, அதிகாரிகள் செய்தி ஊடகங்களை சோதனை செய்தனர், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களை துன்புறுத்தி விசாரித்தனர்,
மனித உரிமை வழக்கறிஞர்களையும் எழுத்தாளர்களையும் சிறைக்கு இழுத்துச் சென்று பல மாதங்கள் குற்றச்சாட்டுக்களின் ன்றி தடுத்து வைத்தனர்என்று சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் மனித உரிமைகள்கண்காணிப்பகம் போன்ற உரிமைகளுக்கான கண்காணிப்புக்அமைப்புகள் கூறுகின்றன.
போர்க்கால துஷ்பிரயோகங்களைப் ஆராயும் விசாரணையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள் அல்லது பயணத் தடைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், கடந்த கால குற்றங்களுக்கான பொறுப்புணர்வை அரசாங்கம் ஒரு அவமதிப்பு என்று கருதுகிறது.தெளிவான செய்தியாகவுள்ளது.
அது தற்செயல் நிகழ்வு அல்ல. இலங்கையின் புதிய அரசாங்கம் 2009 ல் மூன்று தசாப்த கால யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்த அதே ஆட்களால் வழிநடத்தப்படுகிறது, பின்னர் அரை தசாப்தத்திற்குப் பிறகு அதைப் பற்றிய விவாதத்தைத் தூண்டியது.
“எங்களுக்கு இனிமேல் நம்பிக்கை இல்லை,” என்று பலவந்தமாக காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கான சங்கத்தின் செயலாளர் லீலா தேவி ஆனந்தநட ராஜா கூறினார், 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது 34 வயது மகன் காணாமல் போயிருந்தார்.. “அதனால்தான் இந்த பிரச்சினையில் எங்களுக்கு சர்வதேச தலையீடு தேவை என்று நாங்கள் நினைக்கிறோம். “என்று அவர் கூறியுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை புதன்கிழமை கூடும் போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மோசமடைவது நிகழ்ச்சி நிரலில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக இருக்கும்.
போரின் போது அனைத்து தரப்பினரும் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையுடன் ஒத்துழைக்க இலங்கை சமீபத்தில் கைவிடப்பட்ட உறுதிப்பாட்டிற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று அரசாங்கத்தின் விமர்சகர்கள் விரும்புகிறார்கள். அத்துடன் பெளத்த சிங்கள இன பெரும்பான்மையினரால் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கத்தின் கடும் போக்கை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபக்ச அரசாங்கம் வடக்கில் பெரும்பான்மையான இந்து தமிழர்கள் உட்பட இன மற்றும் மத சிறுபான்மையினரை அந்நியப்படுத்துவதாகவும் பாகுபாடு காட்டுவதாகவும் மனித உரிமைகள் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன. இத்தகைய கொள்கைகள் உள்நாட்டுப் போரை முதன்முதலில்ஊக்குவித்த அதே பதட்டங்களைத் தூண்டுகின்றன, தமிழ் கிளர்ச்சியாளர்கள் ஒடுக்குமுறைக்குஎதிராக பிரிந்து சென்ற ஒரு அரசை நிறுவ முயற்சிப்பதன் மூலம் பதிலளிக்க முயன்றனர்
மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிசேல் ப ச்லெட்டின் கண்டுபிடிப்புகளை ஐ.நா பேரவை பரிசீலிக்கும், அவர் பெ ப்ரவரி 9 மதிப்பீட்டில் நாட்டின்செல் திசையைப் பற்றி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிவ்ருந்தார்.மேலும் இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பும் வாய்ப்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.
“கடந்த ஆண்டின் முன்னேற்றங்கள் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான சூழலை அடிப்படையாகக் கொண்டுள்ளன, ஜனநாயக பரிசீலனைகள் மற்றும் சமப்படுத்தல்கள் மற்றும் குடிமைக்கான வெளி போன்றவை படிப்படியாக அழிந்துவிட்டன., மேலும் அபாயகரமான முறையில் விலக்கி வைத்தல் மற்றும் பெரும்பான்மைபற்றியபேச்சு மீண்டும் உருவாக இடமளித்தது ” என்று திருமதி ப ச்லெட் அறிக்கையில் எழுதியுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையில் கருத்துத் தெரிவித்தபோது , இலங்கையின் வெளிவிவகாரஅமைச்சர் தினேஷ் குணவர்தன,, “இலங்கைக்கு எதிராக செயற் படும் சக்திகளின் ” வேலையென குறிப்பிட்டதுடன் , நாட்டின் இறைமையைஐ. நா. வின் அறிக்கை மீறுவதாகவும் அறிவித்தார்.அத்துடன்
அறிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று ம் குணவர்த் தன உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார், ஏனெனில் இது “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளிடையே மன உறுதியை இழக்கச் செய்துவிடும் ம்”.
“பேரவைஅளவுகோல்களை வைத்திருக்க வேண்டும்,” என்று ம் அவர் கூறியுள்ளார்.
ஒரு குறுகிய காலத்திற்கு, இலங்கை, மியான்மருடன் சேர்ந்து, மோதலின் நிழல்களிலிருந்து ஒரு ஜனநாயகமாகமலர்ந்து வருவதற்கான வெற்றிக் கதையை கொண்டதாக பார்க்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டில், சாத்தியமில்லாத அரசியல் கூட்டணியொன்று , 2009 ல் தமிழ் கிளர்ச்சியை நசுக்கிய ஜ னாதிபதி மகி ந்த ராஜபக்ச வை தோற்கடித்தது.
போர்க்கால துஷ்பிரயோகங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்த புதிய அரசாங்கம், போர்க்கால குறைகளை நிவர்த்தி செய்யத் தொடங்கியது டன் சிவில் சமூகம் தோன்றுவதற்கான வெளியையும் ஏற்படுத்தியது.பேரழிவுகரமான போரின் சில காயங்களை குணப்படுத்தும் பாதையில் நாட்டை நிறுத்தியது. போரின் போது காணாமல் போனவர்களின் குடும்பங்கள் என்ன நடந்தது என்று கணக்கிடுவதற்கு ஆரம்பித்தன.”கண்காணிப்பு சரியான முறையில் நிறுத்தப்பட்டிருக்க வில்லை. அவர்கள் இராணுவமயமாக்கலைஇல்லாமல் செய்திருக்கவில்லை , ”என்று இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் நாதன் கூறியுள்ளார்.