ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்கு சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்

24.08.2021 14:35:44

ஆப்கானிஸ்தானில் உள்ள உக்ரைன் நாட்டு மக்களை மீட்க சென்ற உக்ரைன் விமானம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, உக்ரைன் உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் விமானங்களை அனுப்பி மீட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க உக்ரைன் விமானம் ஒன்றை ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தது.


அந்த விமானம் காபூலில் இருந்து உக்ரைன் நாட்டு மக்களை மீட்டு சொந்த நாடு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் விமானத்தை கடத்தியது. விமானம் தற்போது ஈரான் நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உக்ரைன் அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.