ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாகிஸ்தானில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்பு !

13.03.2021 08:05:10

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பாகிஸ்தானில் ஆறு இலட்சத்து 198பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 31ஆவது நாடாக விளங்கும் பாகிஸ்தானில், இதுவரை மொத்தமாக 13ஆயிரத்து 430பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 701பேர் பாதிக்கப்பட்டதோடு 53பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 18ஆயிரத்து 703பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 709பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்து 68ஆயிரத்து 65பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.