மக்கள் பொருளாதார ரீதியில் பலம் பெறுவதனை சுயலாப சக்திகள் விரும்பவில்லை- டக்ளஸ்

20.06.2021 11:37:22

மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து வருவதனை சில சுயலாப சக்திகள் விரும்பவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) மன்னார், இலுப்பைக் கடவைக்கு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்குள்ள கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் கிராம மக்களின் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய கடலட்டை பண்ணை தொடர்பாக, தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதாவது, மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைவதனை விரும்பாத சில சுயலாப சக்திகளே கடலட்டை பண்ணை  தொடர்பாக, தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு குறுகிய நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முரண்பாடுகள் தீர்த்து, யாரையும் எதிர்பார்க்காமல் வாழக்கூடிய வாழ்வாதாரத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.