தங்க சுரங்கத்தில் இருந்து சீனாவில் ஒரு சுரங்கத் தொழிலாளி மீட்பு !

24.01.2021 10:22:59

வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் இருந்து ஒரு சுரங்கத் தொழிலாளி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சுரங்க வெடிப்புக்குள்ளாகி 14 நாட்களுக்குப் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிக்கிக்கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளி மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர ஷாண்டோங் மாகாணத்தில் யந்தாய் பிராந்தியத்தில் தங்கம் உற்பத்தி செய்யும் முக்கிய சுரங்கத்தில் ஜனவரி 10 இடம்பெற்ற விபத்தில் இருபத்தி இரண்டு தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

ஐந்தில் ஒரு சுரங்க தொழிலாளி இறந்துவிட்ட நிலையில் 11 பேர் தொடர்பான தகவல் மீட்புக் குழுக்களுளுக்கு கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீதமுள்ள தொழிலார்களை மீட்பதற்கு இன்னும் இரு வாரங்கள் ஆகலாம் என மீட்புக்குழு அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.

தற்போது ஒன்பது சுரங்கத் தொழிலாளர்கள் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.