
05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
19.09.2025 08:08:06
சீரற்ற வானிலையால் இலங்கையின் 05 மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) தகவலின்படி, கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.