வயநாடு நிலச்சரிவு.. 3 பேர் உயிருடன் மீட்பு..
03.08.2024 09:30:20
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 3 பேரை கண்டுபிடித்த கடலோர காவல் படை அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.
சமீபத்தில் மிக மோசமாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் உள்ள சூஜிப்பாறை நீர்வீழ்ச்சியின் பாறைகளின் மேல் 3 பேர் அமர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேரும் பாறைகளின் மேல் அமர்ந்தபடி உதவி கேட்கும் வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து அவர்களை மீட்க மீட்பு படையினர் திட்டமிட்டனர். வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அருகே நெருங்குவதில் சிரமம் என்பதை புரிந்து கொண்ட மீட்பு படையினர் உடனே ஹெலிகாப்டர் மூலம் 3 பேரையும் மீட்டனர். தற்போது 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.