இத்தாலியில் 43இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

23.07.2021 10:25:03

இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 43இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால் 43இலட்சத்து இரண்டாயிரத்து 393பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் இத்தாலியில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 920பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 57பேர் பாதிக்கப்பட்டதோடு 15பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் தொற்றினால் பாதிக்கப்பட்ட 54ஆயிரத்து 866பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 158பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 41இலட்சத்து 19ஆயிரத்து 607பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.