ஜனவரியில் வந்து குவிந்த இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்

01.02.2023 21:00:00

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள்  வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 102,545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

ரஷ்யா,இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலா பயணிகள்

ஜனவரி 2022 இல் பதிவாகிய 82,327 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில் இது 20,218 சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பாகும்.

இந்த காலகட்டத்தில் ரஷ்யாவிலிருந்து 25,254 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 13,759 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,483 பேரும் வருகை தந்துள்ளனர்.

ஜேர்மன், பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, மாலைதீவு மற்றும் இஸ்ரேல் ஆகியநாடுகளில் இருந்து ஏனையோர் வருகை தந்துள்ளனர்.

Gallery