தசாப்தம் கடந்து நிகழும் முக்கிய அரசியல் மாற்றம்

23.05.2022 09:16:29

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து விலக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இணக்கம் வெளியிட்டுள்ளார்.

15 வருடங்களிற்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட நிலையில், அதனை இன்னுமொருவருக்கு கையளிக்க கோட்டாபய ராஜபக்ச இணங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.