
பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை வழங்கும் சீனா!
சீனாவில் தயாரிக்கப்பட்ட J-35 ஸ்டெல்த் போர் விமானங்களை பாகிஸ்தான் விரைவில் பெற்றுக் கொள்ளவுள்ளது. முதற்கட்டமாக 40 விமானங்களை சீனா வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பாகிஸ்தான் விமானப்படையை ஐந்தாவது தலைமுறை போர் விமானங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்துவைக்கிறது. |
இந்தியா தற்போது எந்த ஸ்டெல்த் போர் விமானத்தையும் பயன்படுத்தவில்லை. ரபேல் மற்றும் Su-30 MKI போர் விமானங்களுடன் இந்தியா மேலாதிக்கம் பெற்றிருந்தாலும், J-35 போர் விமானங்கள் வந்தவுடன் அந்த வலிமை சமனாகும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். J-35-ன் அம்சங்கள்: J-35A எனப்படும் இந்த விமானம் இரட்டை என்ஜின், சப்பர் சோனிக் வேகம், ரேடாரில் தெரியும் சாத்தியம் மிகக் குறைவு (Radar Cross Section: 0.001 sqm), மற்றும் மற்ற ஆயுதங்களுடன் இணைந்து குறி பகிரும் திறன் கொண்டது. இது F-35 போல் காணப்படுகிறது. இந்தியாவின் AMCA (Advanced Medium Combat Aircraft) திட்டம் தான் ஒரே விடை. ஆனால் அது 2035-க்குப் பிறகே பணிக்கு வரும். அதுவரை, இந்தியா தனது ரேடார் மற்றும் மற்ற பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தவேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து ஸ்டெல்த் சக்தியில் முன்னேறும் நிலையில், இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. |