செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைத்தது வெற்றியா?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருப்பது உண்மைதான் என்றாலும், இதனை முழுமையான விடுதலையாகவோ அல்லது இறுதி வெற்றியாகவோ கருத முடியாது. இது வெறும் தற்காலிக நிவாரணமே தவிர, வழக்கிலிருந்து அவர் விடுபட்டுவிட்டார் என்று அர்த்தமல்ல. இந்த முன்ஜாமீனுக்கு பின்னால் நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதன்படி, அவர் தினமும் காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் ஆஜராகிக்கையெழுத்திட வேண்டும். மேலும், வழக்கின் விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை அவர் மீறினாலோ அல்லது விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டாலோ, அவரது ஜாமீனை ரத்து செய்ய அரசுக்கு முழு உரிமை உள்ளது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டால் அவர் மீண்டும் சிறைக்கே செல்ல நேரிடும்.
எனவே, இந்த முன்ஜாமீனை ஒரு பெரிய வெற்றியாக கருதி திமுகவினர் கொண்டாடுவதற்கு எந்த காரணமும் இல்லை. சட்டத்தின் பிடி இன்னும் தளரவில்லை என்பதை உணர்ந்து, அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். கடந்த காலத்தை போல சிறைவாசம் எளிதாக இருக்கும் என்று எண்ணாமல், சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிப்பதே நல்லது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.