ரயில் சேவைகள் முடங்கின: பயணிகள் தவிப்பு

10.07.2024 08:11:28

 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தால் ரயில் பயணிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

கொழும்பு கோட்டை வரை பல ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது. ரயில்வே சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் மூலம் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. வேலைநிறுத்தப் போராட்டத்தால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.