மழை பாதிப்பை ஆய்வு செய்யும் 7 பேர் கொண்ட அரசின் குழு
19.11.2021 09:15:46
தமிழ்நாட்டில் மழை பாதிப்பை ஆய்வு செய்யும் 7 பேர் கொண்ட ஒன்றய அரசின் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. 7 பேர் குழுவில் நிதி அமைச்சக அதிகாரி ஆர்.பி.கவுல், வேளாண் அதிகாரி விஜய் ராஜ் மோகன் இடம்பெற்றுள்ளனர்.
நீர்வளத்துறை அமைச்சக இயக்குனர் தங்கமணி, மின்துறையில் இருந்து பாவ்ய பாண்டே குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சாலை போக்குவரத்து அமைச்சக்கத்தில் இருந்து அதிகாரி ரஞ்சய் சிங் 7 பேர் குழுவில் இடம்பெற்றுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி எம்.வி.என். வர பிரசாத் 7 பேர் குழுவில் உள்ளார்.