நடிகர் ஆர்யா மீது வழக்கு பதிவு!
13.07.2026 12:19:48
|
நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் படம் அனந்தன் காடு கடந்த மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது. விமர்சனமும் சுமாரான லெவலில் தான் வந்திருந்தது. இந்நிலையில் தற்போது ஆர்யா மீது ஹைதராபாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதற்கும் இந்த படம் தான் காரணம். |
|
கடந்த வருடம் சினி டெக்னீக் என்ற நிறுவனத்திடம் இருந்து அனந்தன் காடு படப்பிடிப்புக்காக 2.12 கோடி ரூபாய்க்கு உபகரணங்கள் வாடகைக்கு எடுத்த நிலையில், தற்போது அதில் 1.8 கோடி ரூபாய் தராமல் ஏமாற்றியதாக புகார் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பணத்தை கேட்டவரை மிரட்டியதாக அனந்தன் காடு தயாரிப்பாளர், ஆர்யா உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |