கமல்ஹாசனை ஈர்த்த மருதநாயகம்

19.10.2021 12:06:23

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கமல்ஹாசனால் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட படம் மருதநாயகம். இங்கிலாந்து ராணி எலிசெபத் சென்னைக்கு வந்து இப்படத்தைத் துவக்கி வைத்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் அத்துடன் நின்றுவிட்டது. அந்தப் படம் மட்டும் முழுமையாக உருவாகி வெளிவந்திருந்தால் பாகுபலி படங்களுக்கு முன்பே தமிழில் ஒரு பெரும் சரித்திர சாதனை நிகழ்ந்திருக்கும்.
 

மருதநாயகம் படத்தை எடுக்க கமல்ஹாசனுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது வானமாமலை எழுதிய தமிழர் நாட்டுப்பாடல்கள் என்ற புத்தகத்தில் இடம் பெற்றிருந்த கான்சாகிபு சண்டை என்ற பாடல் என்பது பிக் பாஸ் 5 மூலமாக வெளிவந்துள்ளது. நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்தப் புத்தகம் பற்றி அறிமுகப்படுத்திய போது அது பற்றி கமல்ஹாசன் பகிர்ந்து கொண்டார்.