”எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள் தகவல்களை வெளியிட்டுள்ளனர்

21.03.2024 14:17:21

பொலிஸ்மா அதிபர் தொடர்பில் தீர்மானிப்பதற்காக அரசியலமைப்பு சபை நடத்திய கூட்டத்தின் உள்ளக தகவல்களை வெளியிட்டதன் மூலம் அரசியலமைப்பு சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

"கடந்த காலங்களில் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களிடையே பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்தன, ஆனால் எந்த உறுப்பினரும் அவற்றை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் தற்போதைய அரசியலமைப்பு சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இது ஒரு பொறுப்பற்ற செயல்," என்று பிரதமர் கூறினார்.