கிளிநொச்சியில் கொரோனாவால் வயோதிபர் மரணம்

21.09.2021 06:04:14

கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செல்லத்துரை கதிர்காமசாமி (வயது 70) என்பவர் வீட்டில் திடீரென உயிரிழந்திருந்தார்.

அவருடைய மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதன்போதே அவருக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.