
பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை விதிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தடையை மீறும் ஆசிரியர்கள், பாடசாலைகள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த உத்தரவுகளை மீறி எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ செயற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 எனும் துரித இலக்கம் மற்றும் 0112 784208 அல்லது 0112 784537 இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி முறை;பபாடு செய்யுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,787 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.