வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது

31.01.2023 22:23:26

தேர்தல் காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்துள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்களுடன் மதத் தலைவர்களிடமும் ஆசி பெற்று தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து வைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஏனைய ஆணைக்குழுக்களுக்கு இவ்வாறான விண்ணப்பங்கள் கோரப்பட்டாலும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுப்பதை அங்கீகரிக்க முடியாது என கூறியுள்ளார்.