கொழும்பில் அபாயகரமான கட்டடங்கள்

23.03.2024 09:19:29

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனை ஆவணப்படுத்தி அவற்றை அகற்றுமாறு உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல குடியிருப்பு தொகுதிகளும், அபாயகரமான நிலையில் உள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. R