
அரசாங்க கொள்கை அறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேறியது!
05.12.2024 08:05:02
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை மீதான தீர்மானம் நேற்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. |
அரசாங்க கொள்கை அறிக்கை மீதான விவாதம் நேற்றுமுன்தினம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இரண்டு நாள் விவாதமாக நடைபெற்றது. |