ரணிலின் அடுத்த நகர்வும் வெற்றி !

20.05.2022 09:00:00

இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முயற்சிக்கும் வேளையில் தமது நாடு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று மாலைத்தீவு உறுதியளித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கைக்கான நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்க அந்த நாட்டின் முன்னாள் அரச தலைவரும் மாலைத்தீவு நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலைத்தீவு, தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்று அரச தலைவர் இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் கூறியுள்ளளார்.

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நஷீத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.