தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 509 பேர் கைது

21.09.2021 05:55:37

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 509 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காலக் கட்டத்தில் 25 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.