உக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: 17 பேர் காயம்

21.03.2024 14:30:33

உக்ரேனின் கிய்வ் (Kyiv) நகரைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் காயமடைந்தவர்களில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாக்குதலையடுத்து உக்ரேனின் ஜனாதிபதி வோலோடிமர் செலென்ஸ்கி உலக நாடுகளிடம் இராணுவ உதவியைக் கோரியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.