கிளிநொச்சி பெரும்போக நெற்செய்கையில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் !

06.12.2023 05:00:00

கிளிநொச்சி மாவட்டத்தில் 28,400 ஏக்கர் நிலப் பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் நோய் தாக்கங் கள் அதிக அளவில் உணரப்பட்டிருப்பதாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஜெகதீஸ்வரி சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இதனால் அந்தந்த பகுதி விவசாய போதனாசிரியர்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்று அதற்கு ஏற்றவாறு உரிய நாசினிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக பயிர்ச்செய்கை கல்மடு குலத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயிகள் பல பகுதிகளில் மடிச்சு கட்டி மற்றும் கபில நிற தத்தி நோய் தாக்கம் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சடுதியாக அதிகரித்த வண்ணம் உள்ளது.