இந்திய ஜனாதிபதிக்கு கிடைத்த உயரிய விருது

06.08.2024 08:13:15

இந்திய ஜனாதிபதி  திரவுபதி முர்மு  மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்தார்.

அதன்படி, நேற்று தெற்கு பசிபிக் தீவு நாடான பிஜி நாட்டுக்கு திரவுபதி முர்மு சென்றடைந்தார்.  விமான நிலையத்தில் திரவுபதி முர்முவை பிஜி பிரதமர் sitiveni rabuka  சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.

இந்த பயணத்தின் முக்கியத்துவமான பிஜி நாட்டு ஜனாதிபதி Wiliame Katonivere மற்றும் பிரதமர் sitiveni rabuka  வை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

 

இதனிடையே, பிஜியின் அதிபர் கட்டோனிவேர் மற்றும் துணை அதிபர் ஆகியோர் திரவுபதி முர்வுமுக்கு அந்நாட்டின் உயரிய விருதான civilian விருதை வழங்கினர்.

பிஜிக்கு சென்றுள்ள முதல் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் என்பது சிறப்பமசமாகும்.  பிஜி பயணத்தைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் timor-leste  ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.