இலங்கைக்கு வந்துள்ள பெருந்தொகை பணம்

08.07.2023 16:09:18

 

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த பணம் குறித்த தகவல்களை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு வந்துள்ளது.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ள வெளிநாட்டுப் பணம் 2,822.6 மில்லியன் டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.