ஆப்கானிலிருந்து பிரித்தானியா வெளியேறியது பேரழிவு- துரோகம் !

24.05.2022 09:33:25

 

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானியா வெளியேறியது ஒரு ‘பேரழிவு’ மற்றும் ‘துரோகம்’ ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

 

உளவுத்துறை, இராஜதந்திரம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் முறையான தோல்விகள் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுக் குழு கூறியது.

வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர், திரும்பப் பெறுவதைக் கையாள்வதைப் பாதுகாத்து, குழுவின் கண்டுபிடிப்புகளை மதிப்பாய்வு செய்து பதிலளிப்பதாகக் கூறினார்.

ஆனால், விசாரணையை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத்தின் உயர்மட்ட சிவில் ஊழியர் சர் பிலிப் பார்டன் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறி, அவரது நிலைப்பாட்டை பரிசீலிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியபோது சர் பிலிப், அப்போதைய வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் மற்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோர் விடுப்பில் இருந்ததாக அறிக்கை கூறியது.

தொழிற்கட்சியின் நிழல் வெளியுறவுச் செயலர் டேவிட் லாம்மி, ‘அரசாங்கத்தின் திறமையின்மை, சோம்பேறித்தனம் மற்றும் தவறாகக் கையாளுதல் ஆகியவற்றின் அளவை இந்த அறிக்கை உயர்த்திக் காட்டுகிறது’ என்றார்.

மேலும், ‘கன்சர்வேடிவ் அரசாங்கம் உலக அரங்கில் பிரித்தானியாவின் நற்பெயரை மோசமாகக் குறைத்துவிட்டது, இந்த பேரழிவுக்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்’ என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கு நாட்டில் 20 ஆண்டுகால பிரச்சாரத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், அமெரிக்கா தலைமையிலான சர்வதேசப் படைகளின் கூட்டணி 30 ஒகஸ்ட் 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது.

பிரித்தானிய படைகளை அனுப்பியது. ஆனால் 2014இல் அதன் போர் நடவடிக்கைகளை முடித்துக் கொண்டது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க நூற்றுக்கணக்கான துருப்புக்களை விட்டுச் சென்றது.