கொழும்பில் இருந்து டாக்காவிற்கு நேரடி விமான சேவைகள் அடுத்த மாதம் ஆரம்பம்

23.03.2024 13:52:56

ஏப்ரல் மாத்தத்தில் கொழும்பு மற்றும்  பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு இடையில்  நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைவதாக குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கும் ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமான சேவையானது இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் மலிவு விலையிலான பயண விருப்பங்களுக்கான வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், பிராந்திய விமானப் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பிரதிபலிக்கிறது.

பங்களாதேஷின் வேகமாக விரிவடைந்துவரும் பொருளாதாரத்தின் வெளிச்சத்தில், இலங்கை வர்த்தகர்களிடமிருந்து ஆர்வத்தை ஈர்க்கும் வகையில், டாக்கா ஒரு பிரபலமான இடமாக உருவாகி வருகிறது.

இந்தப் போக்கை அங்கீகரித்து, வளர்ந்து வரும் இந்த சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த கட்டணத்தில், சரியான நேரத்தில் மற்றும் திறமையான விமான இணைப்பை வழங்குவதற்கு ஃபிட்ஸ் ஏர் உறுதிபூண்டுள்ளது.

இந்த விமான சேவை ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆரம்ப கட்டணமாக 74,600 ரூபாவாக அறவிடவுள்ளது.

தற்போது ஃபிட்ஸ் ஏர் (FitsAir) கொழும்பில் இருந்து டுபாய், மாலி மற்றும் சென்னைக்கு நேரடி சேவைகளை வழங்குகிறது.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள ஃபிட்ஸ் ஏரின்  www.fitsair.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். அத்தோடு,  (+94) 117 940 940 என்ற எண்ணில் அவர்களின் பிரத்யேக வாடிக்கையாளர் சேவைக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது (+94) 777 811 118 என்ற எண்ணில் வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.