பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம்

22.01.2022 11:23:22

மும்பையின் தார்டியோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 20 தளங்கள் கொண்ட அந்தக் குடியிருப்பின் 18-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது.

 

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். மீட்புப்பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

 

இந்நிலையில், மும்பை தார்டியோ அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

 

மேலும் தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தோர் குடும்பத்துக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணம் அளித்துள்ளார்.