பெண் சட்டத்தரணி மர்மமான முறையில் உயிரிழப்பு
01.04.2023 20:00:00
பெல்மடுல்ல புலத்வெல்கொட வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் நேற்றையதினம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து பெல்மடுல்ல காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
40 வயதான துஷ்மந்தி அபேரத்ன என்வரின் சடலம் அவரது படுக்கையில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரணத்தில் சந்தேகம்
காலையில் வீட்டிற்கு வந்த பணிப்பெண் சடலத்தை பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
கடந்த 30ம் திகதி இரவு முதல் வழக்கறிஞரின் கணவர் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணியின் குடும்பத்தினர் பெல்மடுல்ல காவல்துறைக்குஅறிவித்துள்ளனர்.