2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

30.04.2026 08:32:05

ஈரான் மீதான முற்றுகையை நீட்டிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

உலகளாவிய முக்கிய எண்ணெயான பிரென்ட் மசகு எண்ணெய் விலை, புதன்கிழமை அன்று ஒரு பீப்பாய் 120 டொலர் (89 பவுண்ட்) அளவைத் தாண்டியது. 

மேலும், அது சிறிது நேரத்திற்கு பின்னர் 122 டெலரை எட்டி, 2022 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அதன் மிக உயர்ந்த விலையை அடைந்தது.

 

அதேநேரம், அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெயின் விலையும் 2.3% உயர்ந்து, ஒரு பீப்பாய் சுமார் 109 டொலராக இருந்தது.

தெஹ்ரானுடனான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை உடைக்கும் நோக்கில், ஈரான் மீது குறுகிய மற்றும் சக்திவாய்ந்த தொடர் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டத்தை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தயாரித்துள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிவிட்டதாகத் தோன்றுவதாலும், முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணை திறம்பட மூடப்பட்டிருப்பதாலும், இந்த வாரம் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளமையும் குறிப்படத்தக்கது.