மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாய் பல்லவி!.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் மணிரத்னம். அவரின் திரைப்படங்கள் தேசிய அளவில் பேசப்படும்.. கவனம் பெறும்.. உலக திரைப்பட விழாவில் அவரின் படங்கள் திரையிடப்படும். அவர் இயக்கிய் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்றது.
அதேநேரம் அடுத்து கமல், சிம்பு ஆகிய இருவரையும் வைத்து அவர் இயக்கிய தக்லைப் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ்ல ஹிட் அடிக்கவில்லை. என்ன காரணமோ அந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.
இந்நிலையில்தான், தற்போது விஜய் சேதுபதி, சாய் பல்லவி இருவரையும் வைத்து ஒரு புத்ய திரைப்படத்தை மனிரதனம் இயக்கி வருகிறார். இந்நிலையில்தான் இந்த படத்திற்கு இஞ்சி வெல்லம் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.. இது தொடர்பான வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது.. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.