இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

13.10.2021 06:07:30

இந்தியாவில் நேற்று  (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 16 ஆயிரத்து 21 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 33 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 2 இலட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் 229 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 51 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.