கொழும்பு நீதிமன்றம் முன்பாக போராட்டத்தில் அருட்சகோதரர்கள்!
09.08.2022 09:43:20
தென்னிலங்கையில் அமைதியான முறையில், போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - 12 புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாகவே இந்த அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அருட்சகோதரர்கள் மற்றும் அருட்சகோதரிகள் இணைந்து நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவரை கைது செய்வதை தடுக்க கோரி நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.