’கோப்’ உறுப்பினர்களை பெயரிடுமாறு அறிவிப்பு

24.03.2024 09:56:00

கோப் குழுவில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிடுமாறு அந்தந்த கட்சிகளுக்கு அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நியமிக்கப்பட்ட  உறுப்பினர்கள் கோப் குழுவில் இருந்து விலகியமை தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எவ்வித விடயங்களும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோப் குழுவில் இவ்வாறான சம்பவம் இடம் பெற்றமை இதுவே முதல் தடவை என பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்