உயிர் பிழைத்த நடிகை ராஷ்மிகா!

19.02.2024 16:39:58

மரணத்திலிருந்து தப்பித்ததாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். 

இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நேற்று மும்பையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நேற்று மும்பையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். 

UK531 என்ற அவர் புறப்பட்ட விமானத்தில் பிரபல நடிகை ஷ்ரத்தா தாஸும் உடன் இருந்தார்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. 

இதைத் தொடர்ந்து விமானத்தை மீண்டும் மும்பையில் தரையிறக்குவதுதான் பயணிகளின் உயிருக்கு நல்லது என்பதை முடிவு செய்த விமானிகள், விமானத்தை பத்திரமாக சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினர்.

விமானிகளின் சமயோஜித நடவடிக்கையால் விஸ்தாரா விமானத்திற்குள் இருந்தவர்களின் உயிர் பாதுகாக்கப்பட்டது. 

இந்த விபரங்களை அறிந்த ராஷ்மிகா மந்தனா, உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மரணத்திலிருந்து தப்பித்தேன் என்று ஸ்ரத்தா தாஸுடன் எடுத்த செல்ஃபியை பகிர்ந்திருந்தார். இந்த பதிவு சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் ஐதராபாத்திற்கு பயணம் செல்வதற்காக மாற்று விமானத்தை விமான நிறுவனம் ஏற்பாடு செய்தது.